இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்!

ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல் உரிய கவுரவத்தைக் கொடுக்காமல் அவர்களிடம் பொய் சொல்லி அதற்குச் சத்தியமும் செய்து நம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவை ஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள்.

இவர்கள் பிறரை ஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவிப்பதை பார்க்கிறோம்.எனவே நாம்,நமக்கு வழிகாட்டியாக வந்த குர்ஆனையும், ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும், நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.

மேலும் வாசிக்க

இறைவனால் இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்!

    (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெருகிறீர்கள். (7:3)

    அல்லாஹ் இவ்வசனத்தின் கருத்தின்படி நாம் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆனையும் அவனால் அனுப்பப்பட்ட நபிصلى الله عليه وسلم அவர்களை மாத்திரமே பின்பற்ற வேண்டும். இதற்கு மாறாக மற்றவர்களைப் பாதுகாவலர்களாக நம்பி பின்பற்றுவோமேயானால் நிச்சயமாக நாம் பகிரங்கமாக வழிகேட்டிலேயே ஆகிவிடுவோம்.

மேலும் வாசிக்க

ஷைத்தானின் சகோதரர்களாகி விட்ட புரோகிதர்கள்!

புரோகிதர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களானாலும் சரி, எந்த நாட்டைச் சேர்ந்தவர்களானாலும் சரி அவர்களின் ஒரே நோக்கம் உண்மையான மார்க்கத்தை மறைப்பது; அதன் மூலம் உலக ஆதாயம் அடைவது. அதற்காக எவர்மீது வேண்டுமானாலும், ஏன் இறைவன் மீதும் பொய் சொல்ல தயங்கமாட்டார்கள். இறைவேதங்களைத் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றி இவ்வுலக வாழ்க்கை வசதிகளை தேடிக்கொண்டார்கள் யூத- கிருஸ்துவ புரோகிதர்கள். இஸ்லாத்தில் புகுந்துக் கொண்ட புரோகிதர்களுக்கு இது முடியவில்லை. காரணத்தை இறைவன் கூறுகிறான்.

மேலும் வாசிக்க

சகுனம் பார்த்தல்

ஜோதிடம் , நல்லநாள் , கெட்டநாள்  , நட்சத்திரம் பார்த்தல் , சகுனம் பார்த்தல் ஆகியவற்றை இஸ்லாம் முழுமையாகத் தடை செய்கின்றது. நாட்களிலோ,நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியதும் கிடையாது. முற்றிலும் தீமை பயக்கக் கூடியதும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள். ஒரு குறிப்பிட்ட நாள் நல்ல நாள் என்றால் அந்நாளில் யாரும் சாகக் கூடாது. யாருக்கும் நோய் ஏற்படக் கூடாது. அந்நாளில் கவலையோ , துக்கமோ நிம்மதியின்மையோ ஏற்படக்கூடாது. இப்படி ஒரு நாள் கிடையாது என்பது சாதாரண உண்மை.

மேலும் வாசிக்க

இஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள்

அனைத்துப் புகழும் சூரியன், சந்திரன், கிரகங்கள் நட்சத்திரங்கள் இவைகளை உள்ளடக்கிய அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவப் படுத்தி ஆட்சி செய்யும் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது.

பரந்த விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பற்றி இரு வகையாக ஆராய்கின்றனர்.

மேலும் வாசிக்க

இஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்!

அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது.

வாழ்வில் பிரச்சனையா? செல்வம் சேர்க்க வேண்டுமா? ஆண்மை சக்தி குறைவா? மண வாழ்வில் பிரச்சனையா? வெளி நாடு செல்ல வேண்டுமா?

“இப்படி எண்ணற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிருஷ்டக் கல் மோதிரம் அணியுங்கள்” என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் தங்கள் சரக்குகளை விற்கின்றனர். இதை பயன்படுத்தி பலர் மோசடிகள் பல செய்து ஏழை எளியவர்களின் உழைப்பில் தங்களின் வயிறுகளைக் கழுவி வருகின்றனர்.

மேலும் வாசிக்க

நரகத்து ஸலவாத்து!

ஸலவாத்துன்-னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான ஒன்றாகும்.

னாரிய்யா என்றால் நரகம், நெருப்பு என்று பொருள், ஸலவாத்துன்-னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும்.

அதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்வித சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள்தான்.

மேலும் வாசிக்க

மன்னிக்கப்படாத பாவம்!

அல்லாஹ் தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி பெற வேண்டுமென்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை இது தீமை இது, பாவம் இது, புண்ணியம் இது என்பதை அறிவித்துக் கொடுத்தான், அதனுடைய பிரதிபலனையும் விளக்கிக் காண்பித்தான், மனிதனை சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும், தீயவைகளையும் செய்யக் கூடிய இயல்புடையவனாக அவன் ஆக்கியுள்ளான். மேலும் வாசிக்க

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம். மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் வாசகர்கள் கவனத்தில் கொள்க!

மேலும் வாசிக்க

தாயத்து! தாயத்து!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்………   அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

ஒரு ஹஜரத் கருப்பு கயிற்றை எடுத்து அதில் திருமறை வசனங்களை படித்து உஃப், உஃப் என ஊதிவிட்டு இந்த கயிறு மகத்துவமிக்கது இதை கழுத்திலோ, இடுப்பிலோ கட்டிக் கொண்டால் துன்பம் விலகும், சூனியம் நீங்கும், காத்து கருப்பு அண்டாது என்று கூறுவார்! மற்றொருபுறம் தர்காஹ்வில் ரெடிமேடாக கருப்பு, சிகப்பு, மஞ்சள் நிற கயிறுகளுடன் சில அரபு வசனங்கள் எழுதப்பட்ட காகிதங்களை சயனைடுகுப்பி போன்ற வடிவத்திலோ உள்ள தாயத்தில் சுருட்டியோ அல்லது கிரிக்கெட் வீரர் அஸாருத்தீன் கழுத்தில் கட்டும் பச்சைநிற தலையைனை போன்ற பொருளில் சொருகிவிட்டோ மக்களை நோக்கி மகத்துவமிக்க இந்த தாயத்தை கட்டிக்கொள்ளுங்கள் என்று விற்பனை செய்வார்! இவர் மக்களை தேடி செல்லமாடடார் மக்கள் இவரை நாடி வருவார்கள் உலகிலேயே மார்க்கெட்டிங் தேவைப்படாத பிஸினஸ் தாயத்து பிஸினஸ்!

மேலும் வாசிக்க

சுன்னத் ஜமாஅத்? பெயரை மாற்றுங்கள்!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.

சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை.

தங்களை சுன்னத் ஜமாஅத் என்று கூறி்க்கொள்ளும் தர்காஹ்வாதிகளே இது சுன்னத்தா? ஷிர்க்கா?

சகோதரர்களே சுன்னத் ஜமாஅத்துக்கும் சுன்னத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று கூற ஆதாரம் அபரிமிதமாக உள்ளது. சுன்னத்  என்பதற்கு நபிவழி என்று பொருள்படுகிறது அதாவது நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் எதையெல்லாம் செய்தார்களோ மேலும் தாம் செய்ததை மக்களுக்கும்  ஏவினார்களோ அவைகளை பின்பற்றுவது சுன்னத் எனப்படும். நபிகளார் (ஸல்) அவர்கள்  வாழ்ந்துக்காட்டிய விதத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதை ஒவ்வொரு முஸ்லிமும்  பேண வேண்டும் என்று வலியுறுத்திவிட்டான். இதோ ஆதாரம் அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

மேலும் வாசிக்க

மாநபியை மட்டம் தட்டும் மத்ஹபுகள்…

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்ற வேண்டிய முஸ்லிம் சமுதாயம் மத்ஹபு எனும் மாயையில் வீழ்ந்து கிடக்கிறது. ‘மத்ஹபுகளும் குர்ஆன், ஹதீசுக்கு  உட்பட்டவை தான்; குர்ஆன், ஹதீஸிலிருந்து தொகுக்கப் பட்டவை தான்” என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். ஆனால் மத்ஹபுகளுக்கும் குர்ஆன், ஹதீசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
மேலும் மத்ஹபு நூற்களில், ஒவ்வொரு மத்ஹபினரும் தங்கள் மத்ஹபைப் பற்றி உயர்த்தியும், மற்ற மத்ஹபுகளைத் தாழ்த்தியும் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். தங்கள் மத்ஹபு மீது வெறியை ஊட்டி, மக்களைத் தக்க வைத்துக் கொள்வது தான் இவர்களின் நோக்கம். மேலும் வாசிக்க

மீலாதும் மவ்லூதும்.

ரபியுல் அவ்வல் மாதம் ஊர் எல்லாம் ஒரே விழாக்கோலம் தான்! தெருவெங்கும் மீலாது விழா! (இறை) இல்லங்களில் மவ்லீதுகள்….. கொண்டாட்டங்களுக்கு குறையே இருக்காது. மீலாதுகளையும் மவ்லீதுகளையும் செயல்படுத்தினால் இறை திருப்தியும், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பரிந்துரையும் கிட்டும் என்பது இன்றைய பல முஸ்லிம்களின் நம்பிக்கை. இவை இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தராத புதிய கலாச்சாரம், (பித்அத்) இறைத்தூதரும், அவர் தம் தோழர்களும் நடைமுறைப் படுத்தாத இந்த மீலாது – மவ்லீது ஹிஜ்ரி 600-ல் எகிப்து அரசன் இர்பல்’ என்பவரால் சில மூட முஸ்லிம்களின் கோரிக்கை மூலம் உருவானது.

இயேசு நாதருக்கு பிறந்த நாள் கொண்டாடும் போது, நமது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏன் பிறந்த நாள் கொண்டாடக் கூடாது? என்ற எண்ணத்தில் பிறந்ததே இந்த மீலாத் விழா! மவ்லீது பாடல்கள்!!!
நாம் உமது புகழை உயர்த்தி விட்டோம்! திருக்குர்ஆன் 94:4

மேலும் வாசிக்க

மன்னிக்கப்படாத பாவம்…

அல்லாஹ், தான் சிருஷ்டித்த படைப்புகள் அனைத்தையும் விட மேலானவனாக மனிதனை  ஆக்கி, அவனுக்கு உலகிலுள்ள எல்லாவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான். அவன் நேர்வழி  பெற வேண்டும் என்பதற்காக தன் தூதர்களை அனுப்பி, நன்மை தீமை பாவம் புண்னியம் என்பதை  அறிவித்துக்கொடுத்தான்; அவற்றின் பிறதி பலனையும் விளக்கி காண்பித்தான்; மனிதனை  சோதிக்க வேண்டுமென்பதற்காக, நல்லவைகளையும் தீயவைகளையும் செய்யக்கூடிய  இயல்புடையவனாக அவனை ஆக்கியுள்ளான்.

    எனவே மனிதன்  தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகின்ற பாவங்களைத் தான் மன்னித்து விடுவதாக அல்லாஹ்  கூறுகின்றான். இப்பாவங்கள் எவ்வளவு பெரியதாக இருப்பினும் அதற்காக பரிகாரம் கோரக்  கூடியவர்களுக்கு அதை பொறுத்து மன்னித்து விடுவதாகவும் கூறுகின்றான். ஒருவன் தான்   செய்த பாவங்களுக்காக உலகில் பாவமன்னிப்பு கோரி பச்சாதாபப் படுவானாயின்,  அப்பாவங்கள்  அனைத்தயும் அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். சில பாவங்களுக்காக  மன்னிப்புக் கோராமல் இறந்து விடுபவனுடைய பாவங்களை மறுமையில் அல்லாஹ் நாடினால்  அவைகளை மன்னித்தருளவும் செய்யலாம்; மன்னிக்காமலும் இருக்கலாம். இது அல்லாஹ்வின்  நாட்டத்தை பொருத்தாகும். மேலும் வாசிக்க

காதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினம்)!

பிரப்வரி 14  காதலர் தினம் என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள்ளையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. மீடியாக்கள் கொடுக்கும் முக்கியதுவத்தால் இந்த கற்பு கொள்ளையர் தினம் இன்றைக்கு இந்திய சமூகத்தில் புற்று நோய்போல் பரவி வருகின்றது. மக்களின் உணர்வு களை தூண்டி அதை பணமாக்க துடிக்கும் மேற்கத்திய பண முதலைகளினால் உருவாக்கப்பட்ட இந்த தினம் இன்று இந்தியாவில் உள்ள இளம் வயதினரையும் தொற்றிக்கொண்டது

கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன்ஸ் தினம் (Valentine day) பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயமாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்தது.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

மேலும் வாசிக்க

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்!

தூய்மையான இஸ்லாத்தில் மார்க்கம் என்ற பெயரிலே பல போலி மார்க்க அறிஞர்கள் இணைவைப்பையும் புரோகிதத்தையும் புகுத்தினர். அதை இன்றும் சுன்னத்தை பின்பற்றுகிறோம் என்று போலி கூச்சல்போடுபவர்கள் நியாயப் படுத்தியே வருகின்றனர். அல்லாஹ்வும் அவனது தூதரும் மார்க்கத்தை தெளிவாக எத்தி வைத்துவிட்ட நிலையில் இவர்கள் எந்த இலாபத்திற்காக மார்க்கத்தை வளைக்கின்றனர் என்று தெரியவில்லை. மேலும் இவர்கள் போன்றவர்கள் அல்லாஹ்வின் திருப்தியை விட வேற ஏதோ ஒன்றின் மீது அதிக நாட்டம் கொண்டுள்ளனரோ என்ற சந்தேகம் வருகிறது. 

வரதட்சணைக் கொடுமையும், நிரந்தர நரகமும்…

இந்தியாவில் வாழும் முஸ்­லிம்கள், இஸ்லாத்தை ஏற்ற பின்பும் அவர்கள் ஏற்கனவே இருந்து வந்த மதக் கலாச்சாரங்களி­ருந்து இன்னும் முழுமையாக விடுபடவில்லை.  விட்ட குறை தொட்ட குறை என்பது போல், தாங்கள் விட்டு வந்த கலாச்சாரங்களை இஸ்லாத்திற்கு வந்த பின்பும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள்.  ஆனால் திருக்குர்ஆனோ இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றச் சொல்கின்றது.

நம்பிக்கை கொண்டோரே! இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான். (அல்குர்ஆன் 2:208)

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்!

ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!

தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அரபு நாட்டின் அறைகளில் தான்.

இறைவனாக மாறும் அவ்லியாக்கள்?

அவர்கள் வாதம்: மவ்லிதை வயிற்றுப் பிழைப்புக்காக ஓதுகிறார்கள் என்று கூறுபவர்கள் தான் சுப்ஹான மவ்லிது, முகைதீன் மவ்லித், சாகுல்ஹமீத் மவ்லித் என்று புத்தகங்கள் அச்சிட்டு வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகிறார்கள்.

நமது பதில்: சில ஆலிம்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மவ்லித் ஓதி வருகிறார்கள் என்ற நமது குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்காமல், மவ்லிதை வைத்துப் புத்தகம் அச்சிட்டு வருமானம் ஈட்டி வருவதாக நம்மீது குற்றம் சாட்டுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதைக் காண்போம்.

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்.

இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும்.
ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
நம் தமிழகத்தைப் பொறுத்த வரை பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்ந்து வருகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் வெறுக்கத்தக்க வகையில் தீமைகளும் நிறைந்து தான் காணப்படுகின்றன. மேலும் வாசிக்க

முஹர்ரம் மாதமும் முஸ்லிம்களின் நிலையும்…

ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் முஸ்லிம்கள் செய்ய வேண்டியவை என்ன? இப்போது முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது என்ன? என்பதைப் பார்ப்போம்.

இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பவை.. மேலும் வாசிக்க

ஸலவாத்துன்னாரிய்யா நரகத்து ஸலவாத்து…

ஸலவாத்துன்னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் செல்ல விரும்பக்கூடியவர்கள் இந்த ஸலவாத்தை ஓதினால் எவ்விதச் சிரமமுமின்றி நேரிடையாக நரகம் செல்லலாம். ஏனென்றால் இந்த நரகத்து ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள் தான். இதனை 4444 தடவை ஓதினால் செல்வம் பெருகும், நோய் நீங்கும் என்ற நம்பிக்கையில் இஸ்லாமிய (?) பெருமக்கள் தங்கள் வீடுகளில் லெப்பைமார்களை அழைத்து மிக விமரிசையாக ஓதி வருகின்றனர். மேலும் வாசிக்க

ஜின்களை வசப்படுத்த முடியுமா?

இறைவனுடைய படைப்பில் ஜின்கள் என்று ஒரு வகையினர் இருப்பதாக திருக்குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் கூறியுள்ளார்கள். மனிதர்களைப் போன்றே இவர்களிலும் நல்லவர்கள் கெட்டவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கைக்கொள்பவர்கள் அவனை மறுப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய செயல்களுக்கு ஏற்ப மறுமை நாளில் இவர்களில் நல்லவர்கள் சொர்க்கத்திற்கும் தீயவர்கள் நரகத்திற்கும் செல்வார்கள். ஆனால் இவர்களை மனிதர்கள் கண்ணால் பார்க்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது. மேலும் வாசிக்க

மறுமை வெற்றிக்கு வழி…

இஸ்லாம் என்ற தூய மார்க்கத்தை நமக்கு எத்திவைப்பதற்காக அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை தூதராக அனுப்பினான். நாம் அல்லாஹ்வை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? அல்லாஹ்வை எப்படி வணங்க வேண்டும்? எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது போன்ற எல்லா விசயங்களையும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். நமது கொள்கை கோட்பாடுகள் வணக்க வழிபாடுகள் செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்த குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் அமைத்துக்கொண்டால் தான் மறுஉலக வாழ்க்கையில் நாம் வெற்றி பெற முடியும். மேலும் வாசிக்க

இஷ்ராக் தொழுகை இஸ்லாத்தில் உண்டா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராத அனாச்சாரங்கள் வணக்கவழிபாடுகள் என்ற பெயரில் நம் சமுதாயத்தில் ஊடுருவி இருந்தது. ஹதீஸ் கலையை படிக்காத அல்லது படித்தும் அதனை செயல்படுத்தாதவர்கள் இந்த அனாச்சாரங்களுக்கு பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டினர்.

அல்லாஹ்வின் கிருபையால் தமிழகத்தில் ஏகத்துவம் வந்த பிறகு இந்த ஹதீஸ்களின் உண்மை நிலை மக்களுக்கு விளக்கப்பட்டு ஓரளவுக்கு இந்த அனாச்சாரங்கள் ஒழிந்துவிட்டது. இது போன்று பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து இஷ்ராக் தொழுகை என்ற வணக்கத்தை மக்கள் செய்து வருகின்றனர். மேலும் வாசிக்க

அசத்தியத்திற்கு அடிமையாக வேண்டாம்

நன்மை பயக்கும் மார்க்கம்

இஸ்லாத்துடன் மற்ற மதங்களை ஒப்பிடும் போது எந்த மதத்திலும் இல்லாத பல்வேறு தனிச்சிறப்புகளை இஸ்லாத்தில் மட்டும் நம்மால் காணமுடியும். அல்லாஹ்வின் மார்க்கம் மனிதர்களின் மறுமை வெற்றிக்கு வழிகாட்டுவதோடு இம்மை வெற்றிக்கும் வழிகாட்கிறது.

திருக்குர்ஆனையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டல்களையும் ஒருவர் கடைபிடித்து வாழ்ந்தால் இந்த உலகத்திலேயே அவர் நன்மைகளை அடையமுடியும். இது இஸ்லாத்திற்கு மட்டும் உள்ள தனிச்சிறப்பாகும்.

பேய் பிசாசு நம்பிக்கையுள்ளவர்களால் இரவில் தன்னந்தனியாக செயல்படமுடியாது. யாரும் இல்லாத தெருவில் தனியே நடமாடமுடியாது. பயம் இவர்களை கவ்விக்கொள்ளும். நிம்மதியை இழந்து கோழகளாக திரிவார்கள். மேலும் வாசிக்க

ஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்!

மனிதனுக்கு சைத்தானால் சில இடஞ்சல்கள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களி­ருந்து அறிந்துகொள்ளலாம்.
‘ஆதமின் மக்கüல் (புதிதாகப்) பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவருடைய மகனையும் தவிர’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்”
அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ர­) நூல் : புகாரி (3431) மேலும் வாசிக்க

இன்றைய முஸ்லிம் பெண்களின் ஆடைக் கலாச்சாரத்தின் ஆட்டம்!

என் கொள்கை சஹோதர !! சஹோதிரிகளே !!!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு !!
இன்ஷா அல்லாஹ் ,வாழுவோம் சத்திய கொள்கையில், மரணிப்போம் சத்திய கொள்கையிலேயே

மானத்தை மறைப்பதற்காகவும், குளிர், வெப்பம், மற்றும் பல காரணங்களில் இருந்து பாதுகாப்பதற்காகவும் அல்லாஹ்வால் மனித இனத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் கவசமே இந்த ஆடை ஆகும்.

சூனியமும் ஜோதிடமும் இஸ்லாம் கூறுவதென்ன?

அளவிலாக் கருணையும் நிகரிலா கிருபையும் உடைய அல்லாஹ்வின் திருப்பெயரால்!

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! ஸலாதும் ஸலாமும் இறுதி நபி மீது உண்டாவதாக!

இன்றைய காலகட்டத்தில், மருத்துவம் செய்வதாகக் கூறிக் கொண்டு சூனியம், ஜோதிடம் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை செய்யக் கூடிய மந்திரவாதிகள் பெருகிவிட்டனர். அறியாமைக்கு ஆளாகியுள்ள சாமானிய மக்களை ஏமாற்றுகின்றனர்! இத்தகைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்கும் நலன் நாடுதல் என்கிற ரீதியில் – இத்தகைய போக்கில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பேராபத்து உள்ளதென்பதைத் தெளிவாக விளக்கிட நாடினேன். ஏனெனில், இதனால்; அல்லாஹ் அல்லாதவர்களுடன் மக்கள் தொடர்புகொள்கிற அவர்களும் காரண காரியத்திற்கு அப்பாலிருந்து நிவாரணம் அளிப்பவர்களே என்று நம்புகிற சூழ்நிலை ஏற்படுகிறது! மேலும் இந்தப்போக்கில் அல்லாஹ் – ரஸுலுடைய கட்டளைகளுக்கு மாறு செய்வதும் உள்ளது! மேலும் வாசிக்க

உறவு அற்றுப் போக ஒரு பாத்திஹா!

இஸ்லாத்தின் பெயரால் மார்க்கம் அறியாத பாமர முஸ்லிம்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பாத்திஹாக்களின் வகைகள் இருக்கின்றதே! அப்பப்பா! கொஞ்சமா? மிச்சமா!

அதில் ஒன்று தான் நான் இங்கே கூறப்போகும்,’உறவு அற்ற பாத்திஹா! இந்த பாத்திஹா வினோதத்தை புரிந்து கொண்டு நீங்களே சிந்தியுங்கள்! மேலும் வாசிக்க

இறைக்கட்டளைகளை நிராகரிப்பதால் ஏற்படும் பயங்கர விளைவுகள்!

ஒழுக்கக் கேடு, அநீதி, துயரம், தோல்வி மனப்பான்மை, தொந்தரவு, தனிமை, பயம், பதற்றம், ஏமாற்றம், அவநம்பிக்கை, பழியஞ்சாமை, கவலை, கடுங்கோபம், பொறாமை, மனக்கசப்பு, போதை மருந்துக்கு அடியாமையாதல், பரத்தமை (விபச்சாரம்), சூதாட்டம், பசி, வறுமை, மரணம் பற்றிய பயம், ஆகிய அனைத்தையும் பற்றிய செய்திளை நாள்தோறும் நாளிதழ்களில் வாசிக்கின்றோம்; தொலைக் காட்சிகளிலும் கேட்கின்றோம். பிரபலமான பத்திரிக்கைகள் இந்தச் செய்திகளுக்கு முழுப்பக்கங்களை ஒதுக்குகின்றன; இவை மனோதத்துவ ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும் விளைவிக்கும் பாதிப்புகளைப் பற்றி சில பத்திரிக்கைகள் இடையறாது எழுதி வருகின்றன. ஆனாலும் மேலே கூறியவைப் பற்றி நாம் இந்த ஊடகங்கள் மூலம் மட்டும் அறிந்து கொள்கிறோம் என்று சொல்ல முடியாது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இத்தகையப் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்கிறோம்; அவற்றை நாம் வாழ்க்கையில் அடிக்கடி அனுபவிக்கிறோம்.

மேலும் வாசிக்க

இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம்!

வல்ல அல்லாஹ், இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் பயன்தரக்கூடியவற்றை, தனது தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அவை குறித்து நமக்குக் கூறாமலும், பாவம் தரக்கூடிய அனைத்துக் கெடுதிகளை விட்டும் நம்மை எச்சரிக்கை செய்யாமலும், இஸ்லாமிய மார்க்கத்தைப் பூரணப்படுத்தவில்லை.

அல்லாஹ் மிகத் தெளிவாகக் கூறுகிறான்: மேலும் வாசிக்க

நபிவழியே நல்வழி!

நபிவழியே நல்வழி,நாயன் அன்பைப் பெறும் வழி! நபிவழி இன்றேல் நாயன் அன்பில்லை!

(இத்திபாவும், இதாஅத்தும்)

(நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராயிருப்பின், என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கிறார்.

மேலும், அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்பட்டு நடவுங்கள் என்றும் கூறுவீராக! அவர்கள் (அதைப்) புறக்கணித்து விட்டால், நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய காபிர்) புறக்கணிப்போர்களை நேசிக்க மாட்டான். (3:31,32) மேலும் வாசிக்க

உலக ஆதாயம் தேடி வழி தவறாதீர்!

“பிரார்த்தனையில் எங்கள் இறைவனே! எங்களுக்கு (வேண்டியவைகளையெல்லாம்) இம்மையிலேயே அளித்து விடுவாயாக! என்று கோருவோரும் மனிதர்களில் உண்டு, ஆனால், இ(த்தகைய)வருக்கு மறுமையில் யாதொரு பாக்கியமுமில்லை.” அல்குர்ஆன் 2:200.

“எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரங்களையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயல்களுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் பூரணமாக அவர்களுக்குக் கொடுத்திடுவோம், அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். (எனினும்) மறுமையிலோ, இத்தகையோருக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறோன்றுமில்லை, அவர்கள் செய்த யாவும் இங்கு அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே.” அல்குர்ஆன் 11: 15,16. மேலும் வாசிக்க

லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!

லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹ் – அல்லாஹுவைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹுவின் திருத்தூதர் ஆவார்கள்.

நமது மூலமந்திரமான இக்கலிமாவில் நாம் ஏற்றுக்கொள்வது,அல்லாஹுவையும், முஹம்மது(ஸல்) அவர்களையும் மட்டும்தான், இக்கலிமாவின்படி அல்லாஹுவையும், முஹம்மது(ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொண்டவர்கள் அல்லாஹுவின் ஆணைகளான திருக்குர்ஆன் வசனங்களையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்வு நெறியான ஹதீஸ்களையும் ஏற்று நடப்போம் என வாக்களிக்கிறோம். மேலும் வாசிக்க

அழிவுப் பாதையில் மனிதன்!

இன்று உலகில் காணப்படும் அனைத்துப் பொருள்களும் அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. மண்ணுக்கடியில் இருந்த உலோகங்கள் வளர்ச்சி பெற்று, விண்ணில் பறப்பது மட்டுமில்லை; இதரகோள்களையும் அடையும் பாக்கியத்தைப் பெற்றுள்ளன. இதுபோல் அனைத்துப் பொருள்களும் மேல்நிலை அடைந்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. சுருக்கமாகச் சொன்னால் மனிதனுக்கு வெளியேயுள்ள அனைத்துப் பொருள்களும் மேன்மை அடைந்துள்ளன. மேலும் வாசிக்க

‘தாயத்து’ அது, ஒரு ஆபத்து!

இன்று முஸ்லிம் சமுதாய பாமரர்களைச் செல்லரித்துக் கொண்டிருக்கும் பல ஷிர்க்கான சம்பிரதாயங்களில் தாயத்தும் ஒன்னறு. இன்று சிலர் தங்களின் தொப்பையை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காக மக்களை ஏமாற்றி காசு பறிக்கும் ஒரு குறுக்கு வழி தான் தாயத்து, தகடு, கயிறு முடியுதல் போன்ற பித்தலாட்டச் செயல்கள். இச்செயல்கள் யாவும் அல்லாஹ்வின் சாபத்திற்குரிய செயல்களாகும். இச்செயல்களை குர்ஆனும், ஹதீசும் வன்மையாகக் கண்டிருக்கின்றன. அல்லாஹ் கூறுகின்றான்: மேலும் வாசிக்க

குறுக்கு வழியும், நேர் வழியும்!

ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இறைவனை நெருங்கி அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அவனிடம் உதவி தேட வேண்டிய முறைகள் யாவை? என்பதில் தான் இந்த முஸ்லிம் சமுதாயம் பல வேற்றுமைக் கருத்துக்களைத் தன்னுள் கொண்டு பலவாறாகப் பிரிந்து கிடக்கிறது. மேலும் வாசிக்க

ஸலவாத்

நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்திற்காகப் பாடுபட்டதற்காகவும், அவர்களின் மூலமாகவே அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான் என்பதற்காகவும், நாம் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அதன் அடிப்படையில் அவர்களுக்காக நாமும் துஆச் செய்கிறோம். அதுவே ஸலவாத் எனப்படும். என்று சென்ற இதழில் கண்டோம். ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பயன்களையும், அதன் சிறப்பையும் நாம் காண்போம். மேலும் வாசிக்க

கதைகளின் பின்னணியில் – ஒளியிலிருந்து…!

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது(ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் ‘ஷபாஅத்’ என்னும் பரிநந்துரை செய்பவர்களாகவும், ‘மகாமுன் மஹ்மூத்’ என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.

அல்லாஹ் அவர்களுக்கு எந்தச் சிறப்புகளை வழங்கி இருப்பதாகக் கூறி இருக்கிறானொ, நபி(ஸல்) அவர்கள், எந்த சிறப்புகள் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்களோ. அவற்றைத் தவிர நாமாகப் புகழ்கிறோம் என்ற பெயரில் கற்பனைக் கதைகளை கட்டி விடுவது மிகப் பெரும் குற்றமாகும். காரணம் நபி(ஸல்) அவர்களுக்கு உரிய தனிச்சிறப்புகள் அல்லாஹ் சொல்லாமல் நாமாக அறிந்து கொள்ள இயலாத ஒன்றாகும். இவ்வாறு வரம்பு மீறிப் புகழ்வதை நபி(ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

மேலும் வாசிக்க

இருளிலிருந்து வெளிச்சத்திற்கு!

இன்று இஸ்லாமின சமுதாயத்தின் பெரும் பகுதியினர் ‘தக்லீத்’ என்ற பெயரில் மரியதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்றுவதாக நம்பிக்கைக் கொண்டு, குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணானவற்றையும் மார்க்கமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு வழி தவறிச் செல்வதால் , ‘தக்லீத்’ தைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரண்பட்டிருப்பவை மார்க்கமாகி விட்டதற்கான முக்கிய காரணங்களை நாம் கவனிப்போம்.

மேலும் வாசிக்க

கூட்டு துஆ ஓதலாமா?

கூட்டு துஆ என்றால் என்ன? ஒருவர் சப்தமாக துஆ கேட்க மற்றவர்கள் சப்தமிட்டு ஆமீன் சொல்லும் ஒரு செயலை தான் கூட்டு துஆ எனக் கூறப்படுகிறது.சுருக்கமாக சொல்லப் போனால் கூட்டாக சேர்ந்து கொண்டு அல்லாஹ்விடம் துஆ கேட்பதே கூட்டு துஆ.சிலர் கூட்டு துஆவிர்க்கும் குனூத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அறியாமல் இருப்பார்கள்.குனூத் என்பது தொழுகையிலேயே சப்தமிட்டு கேட்கப் படும் துஆ, ஆனால் கூட்டு துஆ என்பது தொழுகைக்கு பிறகு கேட்கப் படும் துஆ. நாம் கூட்டு துஆ பற்றி மட்டுமே இங்கே விளக்குகிறோம்.  கூட்டு துஆ , ஜனாஸா நல் அடக்கத்தின் போதும்,ஹஜ் பயனம் செல்லும் போதும், ஐவேளைத் தொழுகைகள் மற்றும் ஜும்ஆ, பெருநாள் தொழுகைகளின் பின்பும் குறிப்பாக சமூக, சமய விவகாரங்கள் போன்ற நேரத்திலும் கூட்டாக துஆ கேட்கப்படுகிறது. இந்த ஒரு செயல் முழுக்க முழுக்க வணக்கம் சம்பந்தப் பட்ட விஷயம். வணக்கம் சம்பந்தமாக நாம் எந்த காரியம் செய்வதாக  இருந்தாலும் அல்லாஹ்வோ அல்லது அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களோ நமக்கு காட்டி தந்திருக்க வேண்டும்.

பெண்களும் ஜியாரத்தும்!

இறந்தவர்களுக்கு கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்ய செல்லக்கூடாது என்று மவ்லவிகளிடையே கருத்தொற்றுமை இருந்து வந்தது. சமீப காலமாக “பரேல்வி” கொள்கையுடைய சில மவ்லவிகள் “பெண்கள் ஜியாரத்து செய்ய அனுமதி உண்டு” என்று கூறத் துவங்கியுள்ளனர். அதற்கு ஆதாரமாக ஒரு சில ஹதீஸ்களை எடுத்து வைத்து அதில் தங்கள் சொந்த அபிப்பிராயங்களையும் கலந்து நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இன்று ஜியாரத்தின் பெயரால் நடக்கின்ற அநாச்சாரங்கள், அவலங்கள்,அலங்கோலங்கள் இவற்றை கண்கூடாகக் கண்ட பின்பும், இதற்கு முழுக் காரணம் தான் என்பதை உணர்ந்த பின்பும் அவர்களின் இத்தீய செயலுக்கு சிலர் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றால் ஒழுக்கக் கேட்டிற்கு பரிந்து பேசுகிறார்கள் என்றால் அவர்களை என்ன செய்வது?

அவர்கள், பெண்கள் ஜியாரத்தை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் ஆதாரங்களைள ஒவ்வொன்றாக நாம் அலசுவோம். மேலும் வாசிக்க

ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து புதன்…

இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம். எனவே தான் இம்மாதத்திற்கு ஸஃபர்-பயணம் என்ற பெயர் வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இம்மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அந்த மாதம் (ஸஃபர்) பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்படி நம்புவதற்கும், அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா? என்று அல்குர்ஆன் நபிவழி அடிப்படையில் நாம் ஆய்வு செய்வதற்கு முன், இது ஒரு மூட நம்பிக்கை தான் என்பதற்குரிய வேறு சில காரணங்களைப் பார்ப்போம். மேலும் வாசிக்க

அல்லாஹ் போதுமானவன்…

“அல்லாஹ் போதுமானவன்” என்ற சொற்றொடரை அடிக்கடி நம்மவர்கள் பயன்படுத்துவதை நாம் செவியுறுகிறோம். அவர்களில் பலர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற தர்ஹாக்களில் தவம் கிடப்பதைக் காணும் போது, “அல்லாஹ் இவர்களுக்குப் போதவில்லை” என்றுதான் கருத வேண்டியுள்ளது. ஏதோ சம்பிரதாயத்திற்காக இந்த சொற்றொடரைப் பயன் படுத்துகிறார்களேயன்றி அதன் பொருளை அவர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. மேலும் வாசிக்க

ஸலவாத்!

“ஸலவாத்துன்னாரிய்யா” என்பது நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்தது அல்ல, மிகவும் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்டது என்பதைச் சென்ற இதழில் கண்டோம். அது எவ்வளவு நல்ல கருத்தை உள்ளடக்கி இருந்தாலும், “பித்-அத்” -பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது – என்ற காரணத்தினாலேயே அது ஸலவாத்தாக ஆக முடியாது என்பதையும் சென்ற இதழில் பார்த்தோம். அதன் பொருளை நாம் கவனித்தாலும் மார்க்கம் அனுமதிக்கின்ற விதத்தில் அமைந்திருக்கவில்லை என்பதை இந்த இதழில் காண்போம்.

“கிறித்தவர்கள் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். மேலும் வாசிக்க

கதைகளின் பின்னணியில்!

உண்மைக்கு இலக்கணம் இத்ரீஸ் (அலை):   இத்ரீஸ் அலைஹீஸ் ஸலாம் அவர்கள் ‘மலக்குல் மவ்த்’துக்கு நண்பராக இருந்தார்களாம்! “மரணத்தை அனுபவ ரீதியில் உணர தாம் விரும்புவதாக” மலக்குல் மவ்திடம் கேட்டுக் கொண்டார்களாம்! அவர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மலக்குல் மவ்த், இத்ரீஸ் நபியை மரணமடையச் செய்து பின்பு உயிர்ப்பித்தார்களாம்! “தான் நரகத்தை கண்கூடாகக் காண வேண்டும்” என்று இரண்டாவது கோரிக்கையை மலக்குல் மவ்திடம் சமர்ப்பித்தார்களாம்! மேலும் வாசிக்க

நல்லறம் செய்திட நாள் நட்சத்திரமில்லை!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸபர் மாதத்தில் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த மாதம் பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நற்காரியங்கள் செய்யக்கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

“இப்படி நம்புவதற்கும், அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா? என்று குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் ஆராய்வதற்கு முன், இது ஒரு மூட நம்பிக்கை தான் என்பதற்குரிய வேறு காரணங்களைப் பார்ப்போம். மேலும் வாசிக்க

திருமண பந்தல் கால் ஊன்றப் போகிறோம்! அவசியம் வாருங்கள்”

கிழக்கு இராமநாதபுரம் பகுதியில் முஸ்லிம் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் ‘பந்தல் கால் ஊன்றுதல்’ பக்தி சிரத்தையோடு நடை பெறுகிறது! அதாவது திருமணத்திற்கு 4 நாட்களுக்கு முன்னதாக திருமண வீட்டார், ஊர்த் தலைவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களிடம் “இத்தனை மணிக்கு பந்தல் கால் ஊன்றப் போகிறோம்! அவசியம் வாருங்கள்” என்று அழைப்பு விடுப்பார்கள். குறிப்பிட்ட நேரத்தில் ஊர் பெரியவர்கள் எல்லோரும் திருமண வீட்டிற்கு வந்து விடுவார்கள். அவர்களில் சிலரை கம்பீரமான தலைப்பாகைத் தோற்றத்தோடும் காணலாம். மேலும் வாசிக்க

திருமணத்தில் தீய பழக்கங்கள்!

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம். மேலும் வாசிக்க